Begin typing your search above and press return to search.
காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து: படகு போக்குவரத்து நிறுத்தம்
காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து உள்ளதால், பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்கு வரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையானது நிரம்பும் நிலையில் உள்ளதாலும், காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வருவாய் துறையினர் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில் இருந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். மறு உத்தரவு வரும் வரை படகை இயக்கக் கூடாது என வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.