/* */

ஜவுளித்துறை ஆலோசனை கூட்டம் : பயனாளிக்கு குறைந்தபட்சம் 20 தறி வழங்க வலியுறுத்தல்

அரசு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 8 தறி மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 தறி வழங்க வேண்டும்.

HIGHLIGHTS

ஜவுளித்துறை ஆலோசனை கூட்டம் :  பயனாளிக்கு குறைந்தபட்சம் 20 தறி வழங்க  வலியுறுத்தல்
X

பைல் படம்

தில்லியில் உள்ள ஜவுளித்துறை சார்பில், விசைத்தறி தொழில் மேம்பாடு மற்றும் குறைகளை களைவது தொடர்பான ஆலோசனை கூட்டம், காணொலி மூலம் நேற்று நடந்தது. மத்திய ஜவுளித்துறை ஆணையர் ரூப்ரஷி, ஜவுளித்துணை இணை ஆணையர் வர்மா ஆகியோர் பதிலளித்து பேசினர். தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த விசைத்தறியாளர்கள் காணொலியில் ஆலோசனை தெரிவித்தனர்.

ஈரோட்டில் இருந்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் பேசியதாவது: கைத்தறிக்கான ரகங்களில் மாறுதல் செய்ய வேண்டும். விசைத்தறிக்கு தனி ரகங்களை ஏற்படுத்த வேண்டும். நூல் விலையை, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறையே நிர்ணயிக்க வேண்டும். அரசு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 8 தறி மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 தறி வழங்க வேண்டும். பி.எல்.ஐ. திட்டத்தில் செயற்கை இலை துணி உற்பத்தி மேம்பாட்டுக்காக, 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 100 முதல், 300 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வோருக்கு, 50 சதவீதம் மானியம் என உள்ளதை மாற்றி, 25 முதல், 30 கோடி ரூபாய்க்கு சிறிய அளவில் மேம்பாட்டு பணி செய்பவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். இதில், கூட்டமைப்பு ஆலோசகர் கருணாநிதி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், தொழில் நுட்ப ஆலோசகர் சிவலிங்கம் உட்பட பலர் பேசினர்.

Updated On: 14 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்