/* */

கவுந்தப்பாடி அருகே பெரிய புலியூர் மஞ்சள் குடோனில் தீ விபத்து

கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூரில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது; இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் சேதமடைந்தது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே பெரிய புலியூர் மஞ்சள் குடோனில் தீ விபத்து
X

மஞ்சள் குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூர் தயிர்பாளையம் காமராஜர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 4 குடோன்களில் ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் மஞ்சள் குடோன் பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் ஒரு மஞ்சள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. குடோனில் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்து அங்கு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். முதலில் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மற்ற 2 குடோன்களுக்கும் பரவியது. இதையடுத்து ஈரோடு, கோபி, பெருந்துறை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காந்தி, நவீந்திரன், ஆறுமுகம், முத்துசாமி ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென மஞ்சள் மூட்டைகளில் பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். நான்கு குடோன்களில் மூன்று குடோன்கள் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது. தீ பிடித்து எரிந்த குடோன்களின் பக்கவாட்டு சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருந்த மஞ்சள் மூட்டைகள் வெளியே எடுக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய புகையை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு குடோன் மட்டும் தப்பியது. இதனால் அந்த குடோனில் இருந்த நூற்றுக்கணக்கான மூட்டைகளை தொழிலாளர்களை கொண்டு அவசர அவசரமாக வெளியேற்றினர். தீ விபத்து பற்றி தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். கோபி டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோனில் இருந்து இன்னமும் கரும்புகை வெளியேறி வருவதால் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 3 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?