/* */

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 11-ந் தேதி வரை தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அவ்வகையில், இன்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதைபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத 25பேருக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. 47 மோட்டார் சைக்கிள்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வகையில் விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தமாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

Updated On: 7 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?