/* */

அம்மாபேட்டையில் தொடர்மழை -20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

HIGHLIGHTS

அம்மாபேட்டையில் தொடர்மழை -20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
X

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான குறிச்சி வயக்காடு பகுதி சித்தார், பூனாட்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாட்சி பாளையம், சுப்பராயன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. வயல்வெளிகளே தெரியாத அளவுக்கு மழைத்தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் மக்காச்சோளம் மற்றும் வாழைகளும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Updated On: 24 Oct 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்