/* */

பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

பவானியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
X
மாற்றுத்திறனாளிகள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்.

பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (22-10- 2021) நடைபெற்றது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மனநல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பவானி தெற்கு ஒன்றிய திமுக கழக பொறுப்பாளர் துரைராஜ் கலந்து கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் உட்பட உபகரணங்களை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.உடன் கவுந்தப்பாடி ஊராட்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

Updated On: 22 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?