/* */

பவானியில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு

பவானி பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வட்டாட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

பவானியில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து  விழிப்புணர்வு
X

பவானி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய வருவாய் துறை அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை, ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. பவானி தாலுகா பகுதியில், தடுப்பூசி போடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில், வருவாய் துறை அதிகாரிகள், தங்கம், வெள்ளி காசு, மொபைல் போன் ரீ-சார்ஜ் கூப்பன், குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்களை குலுக்கல் நடத்தி பரிசாக வழங்கி வருகின்றனர். நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாமுக்கும், பரிசுகளை அறிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அம்மாபேட்டை ஒன்றியம், சின்னபுலியூர், ஓடத்துறை ஊராட்சி மக்களுக்கு கிடைக்காது. பிற பகுதி மக்களுக்கு மட்டுமே பரிசு உண்டு. முதல் பரிசாக, 1,000 ரூபாய் மதிப்பில், ஐந்து பேருக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ், இரண்டாவது பரிசாக, 100 பேருக்கு குடை அறிவித்துள்ளனர். பவானி தாலுகா அலுவலகத்தில், 13ம் தேதி இதற்கான குலுக்கல் நடக்கும். பரிசு பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் என்றும், வருவாய் துறை அதிகாரிகள் பவானி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 9 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...