/* */

பவானி கூடுதுறையில் நாளை முதல் தர்ப்பணம் செய்ய அனுமதி

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், நாளை முதல் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானி கூடுதுறையில் நாளை முதல் தர்ப்பணம் செய்ய அனுமதி
X

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில். 

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனோ தடுப்பு நடவடிக்கையால் பவானி கூடுதுறையில் கடந்த மே மாதம் முதல், திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களில் தர்ப்பணம் தீர்த்தங்களில் புனித நீராட அனுமதித்துள்ளனர். ஆனால், கூடுதுறையில் தடை தொடர்வது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


பவானியில் நேற்று முன்தினம் பேசிய இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், கூடுதுறையில் உடனடியாக தடையை நீக்க வேண்டும். தடை தொடர்ந்தால் நவம்பர் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சபர்மதி நேற்றிரவு கூறியதாவது: கூடுதுறையில் விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30-ம் தேதியுடன் முடிகிறது. டிசம்பர் 1-ம் தேதி (நாளை) முதல் திதி, தர்ப்பணம் செய்ய மக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 30 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...