/* */

பவானியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்

பவானியில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

பவானியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
X

பவானி கந்தன்பட்டறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்மணியிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் தண்ணீர் குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாமில் உள்ளவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செல்போன் மூலம் பேசினார்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானியில் கந்தன்பட்டறை நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்ணிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக பேசினார். அப்போது காவிரி ஆற்றில் வெள்ள பாதிப்பு குறைந்து வருவதால் நம்பிக்கையாக இருக்குமாறு ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்தார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாமில் வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து வெள்ள பாதிப்பின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முகாமில் உள்ள பெண்ணிடம் திடீரென முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி அனைவரையும் நலம் விசாரித்தது முகாமில் இருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Aug 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்