அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
X

கோப்பு படம்.

ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், மேட்டூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை ஒரு கட்டு ஆகும். இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.140-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், மேட்டூர், திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story
ai marketing future