Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் 2,600 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோட்டில் 2,600 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
இதுகுறித்து ஈரோடு வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் கூறியதாவது:
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும், என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளை சேர்ந்த ஆயிரத்து 2,600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த. போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.