/* */

ஆப்பக்கூடல் அருகே தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு 'சீல்'

ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே  தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு  சீல்
X

பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில்,  ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஒரிச்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் இதே பகுதியில் கோகுல் ஆயுர்வேத மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவரது மருத்துவமனையில் அலோபதி மருத்துவம் பார்ப்பதற்காக, ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகார் செய்தார். அதன் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, மருத்துவர் தேவராஜ் வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இது சம்பந்தமாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து. இன்று பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆப்பக்கூடல் போலீசார் உதவியுடன் மருத்துவர் தேவராஜுக்கு சொந்தமான சித்தா ஆயுர்வேத மருத்துவமனை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 19 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து