/* */

ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்

நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி ஆவாரம் பூ, பூலாம் பூ விற்பனை அமோகமாக நடந்தது.

HIGHLIGHTS

ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்
X

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூலாம் பூ மற்றும் ஆவாரம் பூ. 

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான நாளை (வியாழக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழிந்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கின்றனர். இதனை ஆப்பக்கூடல், சக்திநகர் , ஒரிச்சேரி , கீழ்வாணி சுற்று பகுதிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Updated On: 12 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்