/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

எஸ்.கணபதிபாளையத்தில் மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
X

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்-அந்தியூர் சாலையில் உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராசு மகன் செந்தில்குமார். போர்வேல் ரீக் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஜெய்ஸ்ரீ என்ற மகளும், மிதுன் சக்கரவர்த்தி என்ற மகனும் உள்ளனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறில், மனைவி கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகளுடன் சென்று விட்டனர்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்குமார் இன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீயில் எரிச்சல் தாங்கமுடியாமல் கோபி-அத்தாணி சாலையில் உருண்ட செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் சாக்குப்பையை கொண்டு தீயினை அணைத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு