சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!

சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!
X

சென்னிமலையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று (பிப்.24) நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

சென்னிமலையில் இன்று (பிப்.24) நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் சமுதாய நல கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை கலந்து கொண்டு வழங்கினார்.


முன்னதாக, சென்னிமலை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, 35 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, துணைப் பதிவாளர் காலிதாபானு, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!
ஈரோட்டில் வரும் பிப்.28ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
உடல் எடையை குறைக்க உதவும் 3 சுவையான சாலட் வகைகள்
ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
உதவி பேராசிரியர் மீது பணி ஒழுங்கு நடவடிக்கை
அ.தி.மு.க., வின் சாதனைகளை பகிர்ந்துகொண்ட இளங்கோவன்
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்
ஈரோட்டில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் முத்துசாமி 110 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!
ஈரோடு சோலாரில் முதல்வர் மருந்தகம் திறப்பு: அமைச்சர் முத்துசாமி விற்பனையை துவக்கி வைத்தார்!
சேலத்தில் பரத நாட்டியத்தின் பெரும் விழா – 300 மாணவியர்களுடன் நாட்டியாஞ்சலி
வி.இ.டி., கலை கல்லுாரியில் ஆறாவது ஆண்டு விளையாட்டு விழா
பெண்கள் பெட்டியில் பயணித்த ஆண்கள் – 47 பேர் கைது!
சிறுத்தை பிடிக்க புதிய யுக்தி – பவானியில் கேமரா மூலம் கண்காணிப்பு