ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
HIGHLIGHTS
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னிமலை, தாளவாடி ஆகிய ஐந்து வட்டாரங்களில் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ஓரிட சேவை மையம் துவங்கி, தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் என இரு பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
முதுகலை பட்டம், கணினி திறன் பெற்ற, 40 வயதுக்கு உட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.tnrtp.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். நவ.,15க்குள் மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், 5, பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு 638001 என்ற முகவரிக்கு, நேரில் அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.