/* */

அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது

அந்தியூரில், இருவேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஒந்தனை பகுதியைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்தியூர் தாசளியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மணிகண்டன் அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து. அங்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேபோல், ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் தொடர்புடைய சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவரை, பவானி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 22 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க