/* */

தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு சீல்!

அந்தியூரில், தடை செய்யப்பட்டப்பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி, சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளான புது மேட்டூர், பள்ளிபாளையம், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஒன்றான கருப்புசாமி கோயில் என்ற இடத்தில், பணியாளர்களை வைத்து தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனி ஒன்று இயங்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமியிடம், கார்மெண்ட்ஸ் மூடி சீல் வைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த கம்பெனிக்கு சீல் வைத்தனர். மேலும் இந்நிறுவனத்தின் மீது அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 14 Jun 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...