/* */

கார் மோதியதால் விபத்து...

அந்தியூர் அருகே விபத்து

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் இன்பராஜ். டிரைவரான இவரும், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரும் கோபியில் இருந்து அத்தாணி வழியாக ஆம்னி வேனில் அந்தியூர் சென்று கொண்டிருந்தனர்.

ஆம்னியை இன்பராஜ் ஓட்டி சென்றுள்ளார் அத்தாணி கைகாட்டி அருகே ஆம்னி சென்று கொண்டிருந்தபோது, வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள குருவரெட்டியூரிலிருந்து கள்ளிப்பட்டி சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆம்னியின் பக்கவாட்டில் மோதியுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஆம்னி டிரைவர் இன்பராஜ் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அப்பகுதியினர் ஆம்னி வேனை தூக்கி நிறுத்தி, இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் உட்பட நால்வரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து உண்டாக்கிய குருவரெட்டியூரைச் சேர்ந்த டிரைவர் சிவலிங்கம் காயமின்றி உயிர் தப்பினார்.

தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2021 9:14 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!