/* */

வனப்பகுதியில் தேக்கு மரம் கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி பறிமுதல்

சென்னம்பட்டி அருகே வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்திய நபரை கைது செய்த வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வனப்பகுதியில் தேக்கு மரம்  கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தண்டா வடக்கு பிரிவு காப்புக்காடு வனப்பகுதியில் சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்னமலை அடிவாரம் வனப்பகுதியில் புதர் மறைவில் ஒருவர் ஒளிந்து இருப்பதை பார்த்த வனத்துறையினர், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பதும், 6 அடி நீளம் கொண்ட நான்கு தேக்கு மரக்கட்டைகள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மான் ஒன்றை வேட்டையாடியதும், 250 கிராம் அளவுள்ள வத்தல் மான்கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து தேக்குமரக்கட்டைகள், துப்பாக்கி, மான்கறி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மாதேஷ்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 9 Sep 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  3. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  5. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  6. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  7. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  8. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  10. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்