Begin typing your search above and press return to search.
அந்தியூரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி
அந்தியூர் அரசு மருத்துவமனை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்தியூர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை அந்தியூர் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கவிதா மற்றும் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியின்போது, சுற்றுச்சூழல், பிளாஸ்டிக்கின் தீமைகள், மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. இந்த பேரணியில், மருத்துவப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.