மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: அந்தியூர் எம்எல்ஏ

மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: அந்தியூர் எம்எல்ஏ

வருவாய் துறைக்கான ஆலோசனை கூட்டத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்து கொண்டார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண என அமைச்சர் உத்தரவு.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வருவாய் துறையினருக்கான ஆலோசனை கூட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

பொதுமக்களின் வருவாய் துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக தங்களிடம் வரும்போது அதை உரிய காலத்தில் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். பட்டா, குடும்ப அட்டை, ஜாதி, பிறப்பு, இறப்பு மற்றும் வருமான சான்று ஆகியவற்றுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் வரும் பொழுது அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை கொடுத்து சான்றிதழ்கள் உரிய முறையில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சமூக நலத் திட்ட வட்டாட்சியர் ஜெயலட்சுமி, துணை வட்டாட்சியர் பிரகாஷ் உட்பட வருவாய் ஆய்வாளர்கள் கிராம, நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story