காய்கறி வேனில் குட்கா கடத்தல்

X
By - Gowtham.s,Sub-Editor |19 March 2025 9:40 AM IST
போலீசாரின் சோதனையில் காய்கறி வேனில் 70 கிலோ குட்கா பறிமுதல்,போலீசார் அதிரடி நடவடிக்கை
சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஈச்சர் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். காய்கறிகள் ஏற்றி வந்ததாகத் தெரிவித்த அந்த வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது போலீசாரின் கவனத்தைக் கவர்ந்தது. உடனடியாக செயல்பட்ட போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலத்தைச் சேர்ந்த 42 வயதான சிவக்குமாரை கைது செய்தனர். மேலும், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu