/* */

இலாபம் தரும் சூரியகாந்தி- விவசாயிகள் மகிழ்ச்சி

இலாபம் தரும் சூரியகாந்தி- விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் அதிக மகசூல் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராசு. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டு 90 நாட்களில் அறுவடைக்கு வருவதாகவும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் தருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் பூக்களுக்கு வாரம் ஒருமுறை சொட்டுநீர் மூலம் தண்ணீர் தெளித்தால் போதுமானதாக இருப்பதாகவும், ஏக்கர் ஒன்றுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே முதலீடு தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் இப்பகுதியில் சூரியகாந்தியை பயிரிட்டு வருவதாகவும் தெரிவித்தார். வியாபாரிகள் தங்களது தோட்டத்திற்கே வந்து சூரியகாந்தி பூக்களைப் பறித்துக் கொண்டு தங்களுக்கு உரிய விலையை அளிப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 2 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!