வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

X
By - Kumar, Reporter |24 Feb 2021 6:15 PM IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu