/* */

அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

கைது செய்யப்பட்ட ரங்கசாமி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அழகு நகரைச் சேர்ந்த கொமரசாமி மகன் ரங்கசாமி. இவர் கடந்த 23ம் தேதி, அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியர் நிக்கோலஸ் என்பவர் மீது அந்தியூர் காவல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக இன்று மாலை அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்ற ரங்கசாமி, அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ரமேஷ் என்பவரிடம், நான் கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை தர முடியாதா என கேட்டார். மேலும் ரங்கசாமி கொடுத்த புகார் மனுவை அவரிடம் கொடுக்க வேண்டும் எனவும், அந்தப் புகார் மனுவை திருத்தி, ஆசிரியர் தன்னை கல்லால் தாக்கியதாக மாற்றி எழுதித் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு தலைமை காவலர் ரமேஷ், புகார் மனுவை தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த ரங்கசாமி, தலைமைக் காவலர் ரமேசை தரக்குறைவாக திட்டியதுடன், சட்டையை பிடித்து அடிக்க சென்றார். மேலும் தன்னை ரவுடி என கூறிக்கொண்டு, மேஜை மீது இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து, உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தலைமை காவலர் ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரங்கசாமி மீது, தகாத வார்த்தையால் பேசியது, காவல் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரங்கசாமி சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டார்.

Updated On: 26 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?