அந்தியூர் கால்நடை சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
X
கோப்பு படம்
By - S.Gokulkrishnan, Reporter |28 Feb 2022 5:00 PM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடைச் சந்தை நேற்று வழக்கம்போல் கூடியது. அந்தியூர் வெள்ளித்திருப்பூர் அத்தாணி கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் மற்றும் எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாடுகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu