ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி ) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (8ம் தேதி ) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

Power Cut News -ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சிவகிரி, நடுப்பாளையம், ஈங்கூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Power Cut News -


ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சிவகிரி, கணபதிபாளையம் , நடுப்பாளையம் மற்றும் ஈங்கூர் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை பகுதிகள்:-

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம்.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை பகுதிகள்:-

சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாைளயம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மாபுதூர், இச்சிபாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்குபுதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

கணபதிபாளையம் மற்றும் நடுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை பகுதிகள்:-

ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம் பாளையம், சாணார்பாளையம், குமரன் பாளையம். நடுப்பாளையம், தாமரை பாளையம், மலையம்பாளையம், கொம்பனைபுதூர், பி.கே.மங்கலம், கொளாநல்லி, கருமாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்துபாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம்.

ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின்தடை பகுதிகள்:-

பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
துப்பாக்கி விபத்தில் பெண் பலி! தாய் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு, சிறுவனின் விளையாட்டு மரணமாக மாறியது!