Begin typing your search above and press return to search.
நசியனூர் அருகே சரக்கு வேன் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தன்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. முதியவரான இவர், நசியனூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருப்பூர் இருந்த வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வேனை ஒட்டிக்கொண்டு வந்த டிரைவர் தமிழரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.