Begin typing your search above and press return to search.
அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவ் மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை, தனலட்சுமிநகர் சேர்ந்த சஞ்சீவ் மூர்த்தி (வயது 56). சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு, தூக்க சென்றுள்ளார்.
இன்று காலை, அவரது மகள் சஞ்சீவ் மூர்த்தியை எழுப்பசென்றபோது, வாயில் நுரை வந்த நிலையில், இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு, அவரை சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அம்மாபேட்டை போலீசார், ஈரோடு மாவட்ட போலீசார் மற்றும் சக காவலர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.