/* */

அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவ் மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

சிறப்பு உதவி ஆய்வாளர் சஞ்சீவ் மூர்த்தி

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை, தனலட்சுமிநகர் சேர்ந்த சஞ்சீவ் மூர்த்தி (வயது 56). சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு, தூக்க சென்றுள்ளார்.

இன்று காலை, அவரது மகள் சஞ்சீவ் மூர்த்தியை எழுப்பசென்றபோது, வாயில் நுரை வந்த நிலையில், இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு, அவரை சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அம்மாபேட்டை போலீசார், ஈரோடு மாவட்ட போலீசார் மற்றும் சக காவலர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 10 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்