அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.

இதில், 7,000 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 5 ரூபாய் 62 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 72 பைசாவிற்கும்,52 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 69 ரூபாயில் இருந்து முதல் 90 ரூபாய் வரையிலும், 8 மூட்டைகள் எள் கிலோ 122 ரூபாய்க்கும், 10 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 70 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

வர்த்தகத்தில், மொத்தம் 79 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story