/* */

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.4.46 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.4.46 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 4,070 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 14 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 34 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு ஒரு கிலோ 66 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 48 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 76 ரூபாய் 89 பைசா முதல் 89 ரூபாய் 09 பைசா வரையிலும், 30 மூட்டைகள் எள் ஒரு கிலோ 112 ரூபாய் 49 பைசாவிற்கும், 25 மூட்டைகள் மக்காச்சோளம் ஒரு கிலோ 22 ரூபாய் 27 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 85.21 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 771 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 2 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  5. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  6. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...