ஈரோட்டில் வரும் 30-ம் தேதி வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோட்டில் வரும் 30-ம் தேதி வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்

ஈரோட்டில் வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது

வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். காலை 11.30 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பகுதி பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

நண்பகல் 12.30 மணிக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business