அந்தியூரில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் பந்தல்
![அந்தியூரில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் பந்தல் அந்தியூரில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் பந்தல்](https://www.nativenews.in/h-upload/2022/04/05/1510627-img-20220405-wa0381.webp)
ஆதர்ஷ் கல்வி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாளை அதிகாலை 5 மணிக்கு துவங்குகிறது.குண்டம் திருவிழாவில் அந்தியூர் மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில், இன்றும் நாளையும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், இன்று இரவு நடைபெற்ற நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu