/* */

பவானி நகராட்சியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

HIGHLIGHTS

பவானி நகராட்சியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
X

பவானி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகரமன்ற தலைவர் சிந்தூரி முன்னிலையில் 27வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் 32 பொருட்கள் அடங்கிய தீர்மானம் உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

இதில் நகராட்சி ஸ்டேசனரி பொருட்கள் வாங்குவதற்கான தீர்மானம், குப்பைகள் தனியார் கொடுப்பதற்கான செலவு, வார்டுகளில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்வதற்கான செலவினங்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார பணிக்கான செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, நகரமன்ற உறுப்பினர்கள் கோடை காலம் தொடங்கி இருப்பதால் இருபத்தி ஏழு வார்டுகளிலும் பொது மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் தேவையான வசதிகள் தொடர்பாகவும் ஆணையாளரிடம் முன்வைத்தனர்.

Updated On: 29 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..