ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா
X
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர் பி.சச்சிதாநந்தன் தலைமை தாங்கினார்.

கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் பிஸினஸ் இண்டலிஜெண்ட் துணைத்தலைவர் கௌரிசங்கர் குணசேகரன் மற்றும் தனியார் தொலைக்காட்சியின் அரசியல் நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளர் எஸ் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


அப்போது, வாழ்க்கையில் சாதனை படைக்க பல்வேறு தடைகளைப் படிக்கல்லாக நினைத்து முன்னேற வேண்டும் என்றும், ஒவ்வொரு முயற்சியும் சாதனைக்கான பயிற்சியென்றும் எடுத்துக்கூறி பல்வேறு அறிஞர்கள் பற்றியும், தன் வாழ்வின் வெற்றிப்பயண அனுபவம் குறித்தும் எடுத்துக்கூறி அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினர்.

தொடர்ந்து, நடப்பாண்டில் சாதனை படைத்த கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். விழா நிறைவாக நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார்.

Next Story
Similar Posts
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா
சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மனுநீதி நாள் முகாம்: 109 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வீட்டு- தொழில் வரி, குடிநீர் கட்டணத்தினை காலதாமதமின்றி செலுத்திட ஆட்சியர் வேண்டுகோள்!
கர்ப்பிணி தாய்மாருக்கு வளையல் அணிவித்து சமூக வளைகாப்பு விழா
ஜேடர்பாளையம் செல்லும் பஸ்களை அதிகரிக்க கோரிக்கை
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான பதிவு தொடக்கம்
பள்ளிப்பாளையத்தில் மழை, காவிரி ரயில்வே சுரங்கத்தில் நீர்தேக்கம்
ஓய்வு ஆசிரியர்களின் போராட்டம்
நாமக்கலில் மகளிர் தின விழாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய உரை
மகள் மாயம், தந்தையின் கவலை
முதல்வர் திட்டம் 3ம் கட்டத்தில் ரூ.1 கோடி உதவி வழங்கல்
தொழிலாளியின் ஆவணங்களை திருடி போலி நிறுவனத்தை இயக்கிய கும்பல்
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை 40% உயர்வு