/* */

பவானி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் பலி

பவானி அருகே தனியார் நிறுவன பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் பலி
X

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செல்லமுத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 37). இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக பவானி சென்றுவிட்டு மேட்டூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பெருந்துறையை சேர்ந்த தனியார் ஜவுளி நிறுவன பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.


இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செல்லமுத்துவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக விபத்திற்கு காரணமான தனியார் நிறுவன பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடியை கிராம மக்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்