/* */

கோபிசெட்டிபாளையம்: கார் - டூவிலர் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம்: கார் - டூவிலர் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால் ரோடு ஸ்ரீராம்புரத்தை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது 32). தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி கயல்விழி (26). அதே பள்ளியில் வேன் டிரைவராக குப்புராஜ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். கும்பராஜிக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், வைசாலி (8) என்ற மகளும், ஹரி விஷ்ணு (4) என்ற மகனும் உள்ளனர்.நவீன் ராஜ், குப்புராஜ் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கூடலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர். இதனையடுத்து, நவீன்ராஜ் தனது மனைவி கயல்விழி மற்றும் குப்புராஜ் மகள் வைசாலி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், குப்புராஜ், தனது மனைவி சிவகாமி, மகன் ஹரி விஷ்ணு ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கொடிவேரி அணையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காசிபாளையம் அருகே உள்ள காந்தி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது, கோபி நோக்கி வந்த காரும், நவீன்ராஜ் மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன.

இதில் மோட்டார்சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட கயல்விழியும், வைசாலியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நவீன்ராஜ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாய மடைந்த நவீன்ராஜை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த கயல்விழி மற்றும் சிறுமி வைசாலி ஆகியோரின் உடலை கடத்தூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  4. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  5. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  7. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  8. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  9. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  10. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...