/* */

அந்தியூர்: தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி

அந்தியூர் அருகே தனியார் பேருந்து மோதியதில், கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர்: தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அருகே உள்ள பிச்சனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (58).கூலி தொழிலாளி. நேற்று இரவு பருவாச்சி அருகே உள்ள பெட்ரோல் பங்கில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, பருவாச்சி புன்னம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் எஸ்பிஎம் என்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மீது மோதியது.

இதில், தலை கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி சரசால் (50) கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 29 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்