/* */

பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்

பவானி அருகே மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து 6 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்
X

சித்தோடு காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர் பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

பின்னர், நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Sep 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!