ஈரோடு: அறச்சலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

ஈரோடு: அறச்சலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்!
X
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.

அறச்சலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் அறச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோயினால் பாதிக்கப்பட்டவருடன் வசிப்போர் சிஓய்டிபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து எடுத்துக்கொள்ளப்பட்டது.


தொடர்ந்து, காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்பு சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, ,காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story