ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!
X
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) 12 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) 12 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) ஞாயிற்றுக்கிழமை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 9 இடங்களில் 12 மையங்களில் மொத்தம் 4,162 மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவ - மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 97.64 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேரும், 2023-ம் ஆண்டு 98.13 சதவீதம் பேரும், கடந்த 2024 ஆண்டு 96.84 சதவீத பேரும் நீட் தேர்வு எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story