/* */

பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

பவானி அருகே கோவில் பண்டிகைக்கு ராட்டினம் அமைக்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்

HIGHLIGHTS

பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் மற்றும் கார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரைச் சேர்ந்தவர் ரவி மகன் நவீன் (19). ராட்டினம் அமைக்கும் தொழிலாளி. இவர் கேசரிிமங்கலத்தில் கோவில் பண்டிகைக்கு ராட்டினம் அமைக்க தனது நண்பர் அருண் (21) என்பவருடன் பவானி - மேட்டூர் ரோட்டில் இன்று மாலை இருசக்கர சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வரதநல்லூரை அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது மேட்டூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் பைக் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற நவீன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அருண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்விபத்து காரணமாக பவானி-மேட்டூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 10 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  3. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  4. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  6. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  10. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...