கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு

கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி குருணை மருந்தை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடுதோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோபிகா(வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு, நாட்டு வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 17ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாமல் கோபிகா குருணை மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர், பெற்றோர் கோபிகாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபிகா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture