/* */

கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி குருணை மருந்தை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடுதோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோபிகா(வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு, நாட்டு வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 17ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாமல் கோபிகா குருணை மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர், பெற்றோர் கோபிகாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபிகா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Aug 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு