முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
X
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகிரியில் முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளாங்காட்டுவலசு பகுதியில் முதிய விவசாய தம்பதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், விளக்கேத்தி நான்கு சாலை சந்திப்பில் இன்று (மே.5) ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.எஸ்.தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார் ஒன்றிய செயலாளர்கள் மயில் சுப்பிரமணி, செல்வராஜ், கதிர்வேல், கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தியும், தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

Next Story
Similar Posts
குழந்தை திருமண தடையை மீறிய இளைஞர் கைது
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!
பவானியில் காதல் மனைவி சடலத்துடன் மது போதையில் தூங்கிய கணவன்: சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை!
ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்கள்!
முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 290 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியா்!
ஈரோட்டில் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை!
இ.பி.எஸ். பிறந்த நாளுக்கு நாமக்கலில் அதிமுகவினர் தீவிர ஏற்பாடு
42 வயது வியாபாரி உடலுறுப்புகள் தானம்-மரணம் தாண்டிய மனிதநேயம்
சேலம் அங்கன்வாடி ஊழியர்கள் 2‑ம் நாளாக போராட்டம்
குடி பழக்கத்தால் சுழன்ற குடும்பம்
கடன் தொல்லையால் ஆசிட் குடித்த வியாபாரி மரணம்