/* */

பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, தியானவர்ஷசன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் விக்னேஸ்வரனை விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழா நடப்பதால், விக்னேஸ்வரன் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, நஞ்சைபுளியம்பட்டி சங்கிலிமடுவு பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் முழ்கினார்.

இதையடுத்து பங்களாப்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 30 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...