ஈரோட்டில் நாளை (மே.11) 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோட்டில் நாளை மே.11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 108, 102, கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் அம்பிகாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களால் 108, 102 மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை மே.11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதில், 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணராக பணிபுரிய, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் - ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி. ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 ரூபாய் மொத்த ஊதியமாக வழங்கப்படும்.
18 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு 24 வயது முதல் 35 வயதிற்குள், 162.5 செ.மீக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,820 வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இதேபோல், 102 ஆம்புலன்சில், சுகாதார அதிகாரியாக பணிபுரிய, கல்வித்தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம் - ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படும்.
அதேபோல், 1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும்.வயது 24 முதல் 35 வரை, உயரம் 162.5 செ.மீ குறையாமல் இருக்க வேண்டும். லைசன்ஸ் எடுத்து 3 வருடம் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஒரு வருடம் பேட்ஜ் நிறைவு எடுத்து வர வேண்டும்.
உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், எந்தவொரு பயிற்சி வகுப்பையும் முடித்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.15,725 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மேலும், நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வர வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, 7397724813 , 73388 94971, 91500 84147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu