கொடுமுடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் விவசாயி பலி: 6 பேர் காயம்

பைல் படம்.
கொடுமுடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் விவசாயி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் அருகே உள்ள ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 40). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான காரில் மனைவி, உறவினர்கள் உள்பட 6 பேருடன் திருச்செந்தூருக்கு சென்றனர்.
பின்னர், ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை அருகே உள்ள வாழநாயக்கன்பாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அர்ஜூனன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu