/* */

கோபி அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், விவசாயி படுகாயம்

கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் விவசாயி படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

கோபி அருகே பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், விவசாயி படுகாயம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் அண்ணமார் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (58). இவர் இன்று அதிகாலை சமனாக்காடு தோட்டத்தில் உள்ள மாட்டில் பால் கரப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வாணிபுத்தூர் - ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்காலில் கரையினை ஓட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பன்றி குறுக்கே வந்ததை கண்டு திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மோகனரங்கனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் வாகனத்தின் மூலம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 28 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு