/* */

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் 13-வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஈரோடு மாநகர பொறுத்தவரை 50 இடங்களிலும், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?